சென்னை,டிச.10- பூமியைக் கண்காணிக்கும் செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் இன்று (புதன்கிழமை) விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமியை கண்காணிப்பதற்காக ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற செயற்கை கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைக்கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலம் புதன்கிழமையன்று மாலை 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்படு கிறது.
இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த தலா 1 செயற்கைக்கோள், அமெரிக்கா வின் 6 செயற்கைகோள்கள் என வணிக ரீதியிலான 9 செயற்கை கோள்களும் இந்த ராக்கெட்டில் வைத்து விண்ணுக்கு அனுப்பப் படுகின்றன. பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் விண்ணில் ஏவப்படு வதை நேரில் பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கு இஸ்ரோவின் அதிகாரப் பூர்வ ஆன்-லைன் முகவரியில் பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்..
75-வது ராக்கெட்
இதுகுறித்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த சிவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பூமியை கண்காணிப்பதற்காக இஸ்ரோ தயாரித்துள்ள ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைக்கோள் நாளை (புதன்) விண்ணில் செலுத்தப் படுகிறது. இது பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் 50-வது திட்டம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் 75வது ராக்கெட் என்ப தால் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்தார்.